நேற்று ஏப்ரல் 23 தமிழ்மக்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர்சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்
— நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
NEW YORK, UNITED STATES, April 24, 2022 /EINPresswire.com/ —
சிறிலங்காவில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாக திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 23) தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டு தளத்திற்கு சென்ற போது, பௌத்த பிக்கு ஒருவர் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் சகதிம் அவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு,
சிறிலங்காவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் என பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்குண்டுள்ள தென்னிலங்கை, அதில் இருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதiயே வெளிக்காட்டுகின்றது.
தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா என தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்கு துணையாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக் காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தை கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்புசார் இனஅழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர் சம்பவத்தின் ஊடாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரவிக்கப்பட்டுள்ளது.
** நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) பற்றி **
Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (நா.க.த.அ) என்பது, ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் வாழும் இலங்கைத் தீவைச் சோந்த பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான அரசாங்கமாகும்.
2009ஆம் ஆண்டு இலங்கை அரசால் பெருமளவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நா.க.த.அ. உருவாக்கப்பட்டது. 135 அரசவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே, சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில்
நா.க.த.அ, மூன்று தடவை தேர்தல்களை நடாத்தியுள்ளது.
இதன் அரசவையானது, மேலவை (செனற் சபை), பிரதிநிதிகள் அவை என இரண்டு அவைகளையும் மற்றும் அமைச்சரவை ஒன்றையும் கொண்டுள்ளது.
தேசியம், தாயகம் மற்றும் சுயநிர்ணயம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு,அமைதியான ஜனநாயக மற்றும் இராஜதந்திர வழிகளில் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கும் பரப்புரையை நா.க.த.அ முன்னெடுத்துள்ளது. மேலும், அதன் அரசியல் நோக்கங்களை,அமைதியான வழிகளில் மட்டுமே அடைய வேண்டும் எனவும் அதன் அரசியலமைப்பு வலியுறுத்துகிறது.
தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை புரிந்த குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோருவதுடன், தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்க பொது சன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நா.க.த.அ. வலியுறுத்துகிறது.
நா.க.த.அ. இன் பிரதமர் திரு.விசுவநாதன் உருத்ரகுமாரன், நியூயோர்க்கைத் தளமாக்க் கொண்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.
மின்னஞ்சல் முகவரி: pmo@tgte.org
இணையத்தள முகவரி: www.tgte-us.org
கீச்சக முகவரி: @TGTE_PMO
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
Transnational Government of Tamil Eelam (TGTE)
+1 614-202-3377
r.thave@tgte.org
Visit us on social media:
Twitter

Asian News is your digital newspaper keeping you updated with the current affairs from around the world.
Any kind of content updation or deletion, kindly email us at info@asiannews.in